யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்டு மீள கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைகழக நிர்வாகத்தினர் இணைந்து நினைவு முற்றத்தை திறந்ததுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு ஈகை சுடர்களை ஏற்றி, மலரஞ்சலிகளை செலுத்தினர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை இன்று திறந்து வைப்பதாக கூறிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா யாழ் போதனா வைத்தியசாலையில் திடீர் நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் தொடர்பான செய்திகளிற்கு