மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தைபிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(13) அதிகாலை இனம் காணப்பட்டுள்ளது.
மீனவர்கள் இன்றைய தினம் மீன்பிடி நடவடிக்கைக்காகக் கடற்கரை பகுதிக்குச் சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரை தேடும் பணி இடம் பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றையதினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.