15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய 21 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல, பனாகன்னிய பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதனைக்குட்படுத்திய போது, 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிறுமியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கர்ப்பத்திற்கு காரணமான இளைஞரை, சிறுமி அடையாளம் காண்பித்தார். இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.