மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 13 வயதான சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கி வந்த 15 வயதான சகோதரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒருவருடமாக சகோதரனால் சிறுமி வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த சகோதரர்களின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின், தாயார் மறுமணம் செய்துள்ளார்.
அவர்களின் பிள்ளைகளான பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி, 15 வயதான சந்தேகநபர், மற்றொரு சகோதரர் ஆகிய மூவரும், அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்துள்ளனர்.
சிறுமி 12 வயதில் பருமடைந்தது முதல், கடந்த ஒரு வருடமாக சிறுவன் வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளார்.
இந்த கொடுமையை பொறுக்க முடியாத சிறுமி, அண்மையில் அதிகளவான தூக்க மாத்திரையை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை உறவினர்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் சிறுமி வழங்கிய வாக்குமூலத்திலேயே இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து சிறுவன் கைதாகினார்.
பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்ற உத்தரவின்படி, சிறார் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டள்ளார்.