வளர்ப்புத் தந்தையால் துஷ்ப்பிரயோகத்திற்குள்ளான பாடசாலை மாணவி! சந்தேகநபர் கைது..

வளர்ப்புத் தந்தையால் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவியின் வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மாணவியின் தந்தை இறுதி யுத்ததில் உயிரிழந்த நிலையில், தாய் இரண்டாவது தரம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது கணவன் போதைக்கு அடிமையானவர் எனவும், தனது வளர்ப்ப மகளான மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.