குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை : ஆரையம்பதியில் சம்பவம் !

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் குடும்பப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காளிகோயில் வீதி மண்முனை ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த (48) வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான காராளசிங்கம் கீதா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த பெண் பிறிதொரு நபரிடம் கடனாக பெற்றுக்கொண்ட பணத்தினை கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லாத போது அதனை திருப்பி கொடுக்க மறுத்ததனால் யாரும் இல்லாத போது வீட்டில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பெலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்ர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.