Home Local news வவுனியாவில் 10 சிறைக் கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில் 10 சிறைக் கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில் 10 சிறைக் கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகியிருந்தன.

அதில், நேரியகுளம் பகுதியில் 15 பேருக்கும், சலனிகம பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், விநாயகபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஈரப்பெரியகுளம் பகுதியில் 3 பேருக்கும், புதுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சாம்பல் தோட்டம் பகுதியில் ஒருவருக்கும், பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், புதிய கற்பகபுரம் பகுதியில் ஒருவருக்கும், மருதமடு பகுதியில் ஒருவருக்கும், மாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைத்தியசாலை விடுதியில் ஒருவருக்கும், உடையார்கட்டு தெற்கு பகுதியில் இருவருக்கும், பட்டக்காடு பகுதியில் 3 பேருக்கும், சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் ஒருவருக்கும், ஒமேக்கா ஆடைத் தொழிற்சாலையில் இருவருக்கும், மாகா நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கும் என 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 10 பேர் வவுனியா சிறைச்சாலை கைதிகளாக உள்ளனர்.

அத்துடன் தமக்கான நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் தாமாக முன்வந்து பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்றுக்கு இலக்கானவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்களினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு
Next articleஊழியர்களுக்கு கொரோனா; தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு