வவுனியாவில் 5பேர் கோவிட் தொற்றினால் நேற்று மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் இருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தனர்.
ஏனையவர்கள் சுகவீனம் காரணமாக வீடுகளில் மரணமடைந்திருந்தனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.