வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் 17 வயது நிரம்பிய சிறுவன் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவனை கண்டுபிடித்து தருமாறு தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் . சம்பவத்தில் வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன் சிவானுஜன் 17 வயதுடைய சிறுவனே காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சிறுவன் சென்றுள்ளார. எனினும் நேற்று இரவு வரையில் அவர் வீடு திரும்பவில்லை தந்தையர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .