Home வவுனியா செய்திகள் வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கோவிட்

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கோவிட்

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 12 பேர் உள்ளிட்ட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகின.

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கோவிட்

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 15 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்கு இலக்கானவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் நேற்றைய தினம் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த (வயது 59) ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவரின் சடலத்தை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் கைது
Next articleகிண்ணியா 13 வயது சிறுமி தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்!