தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் தான் ராதிகா. இவர் 80களில் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர். இப்போது குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சரத்குமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தான்.
தனது மகனுடன் ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிருவார்.அந்த வகையில் தற்போது தனது மகனுடன் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ளார்கள். ஏனென்றால் சிறுவனாக பார்த்த ராகுல் தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஆள் ஆடையாள்ம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் தனது மகனின் பட்டமளிப்பு இன்று நடைபெற்றுள்ளது என்று ராதிகா சந்தோஷமாக தனது பதிவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.