யாழ் – புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள் வெட்டுக் குழுவினர் அட்டகாசம் செய்துவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உடைமைகள் என்பவற்றைச் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில், வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் குறித்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.