யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பவதியான 19 வயது பெண்ணின் மரணத்தில் சந்தேகம்..! கணவனை கைது செய்யுமாறு பணிப்பு.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 19 வயதான கர்ப்பவதியான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்,
அவருடைய உடலில் இருந்த தீ காயங்கள் குறித்து சந்தேகம் உள்ளதாக கூறியிருக்கும் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், கணவனை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்துமாறு பொலிஸாரை கேட்டுள்ளார்.
உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துஜன் ரிசிக்கா (வயது-19) என்ற பெண்ணே உயிரிழந்தார். திருமணமாகிய ஒருவருடம். அவர் 08 மாதம் நிரம்பிய கர்ப்பிணப்பெண்.
கடந்த 17ஆம் திகதி அவரது உடலில் மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டப்பட்ட எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 6 நாள்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
பெண்ணின் உடலில் தீ காயங்கள் ஏற்பட்டமையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,
கணவனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் பொலிஸாருக்கு பணித்தார்.