Home முல்லைத்தீவு செய்திகள் டிக்டொக் காதல் விவகாரம்!! என்னை தேட வேண்டாம்” என தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான...

டிக்டொக் காதல் விவகாரம்!! என்னை தேட வேண்டாம்” என தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான 12 வயது சிறுமி! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற சிறுமி அதிகாலையில் வீட்டில் இல்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில், “தன்னை தேடவேண்டாம்” என கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மூங்கிலாற்று பகுதியில்

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த சிறுமி, டிக்டொக் மூலம் ஹட்டன் பகுதியினை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளதாகவும், இதன்படி காதலனை தேடி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக்டொக் காதல் விவகாரம்!! என்னை தேட வேண்டாம்” என தந்தைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான 12 வயது சிறுமி! முல்லைத்தீவில் சம்பவம்

இதுவரை சிறுமியின் தொடர்பு ஒருதடவை கிடைத்துள்ளதாகவும், மேற்கொண்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்.பல்கலைக்குள் நுழைந்த இருவர் கைது
Next articleஅரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை