முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று 12.04.21 இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்த படைச்சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
கெப்பற்றிக்கொலாவ பகுதியினை சேர்ந்த 37 அகவையுடைய படைச்சிப்பாய் ஒருவர் விடுமுறையில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த வேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கப் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானார்.
இதன் போது காயமடைந்த படைச்சிப்பாய் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி 13.04.21 அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய கப் சாரதி வாகனத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளார்.
விபத்து குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வாகனம் முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து சாரதியினை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.