முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டுக்குழு வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நின்ற காருக்கும் தீ வைத்துள்ளனர்.
இன்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் , தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்