முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுநீரக நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுங்கேணியினை சேர்ந்த சிறுநீரக நோயாளி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக நோய்கான குருதி மாற்றலுக்காக யாழ்போதனா மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கு குருதி மாற்றப்பட்டு வீடு திரும்பிய நிலையில்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுநீரக நோயாளிக்கு குருதி வெளியேறுவதால் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னிலையில் அவருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறுநீரக நோய் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் இன்று 27.06.21 உயிரிழந்துள்ளார்.