சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ள இந்தந் சடலம், சுமார் 40 முதல் 45 வரையிலான வயது மதிக்கத்தக்கவருடையது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நபர் கொலைசெய்யப்பட்டு சடலமாக போடப்பட்டுள்ளாரா அல்லது இது இயற்கை மரணமா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.