மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று மூவர் உயிரிழந்துள்ளதுடன் 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று ஞாயிற்றுக்கிழமை 04 ஆம் திகதி தெரிவித்தார்.
ஏறாவூர் சுகாதார பிரிவில் ஒருவரும் , கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவருமாக மூவர் உயிரிழந்ததாக மேலும் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில்
மட்டக்களப்பு – 31
காத்தான்குடி – 57
ஓட்டமாவடி 02
வாகரை-12
கிரான்-01
கோறளைப்பற்று மத்தி – 02
செங்கலடி – 01
ஏறாவூர் – 06
வெளிமாவட்டத்தார்-02
பேர் உட்பட்ட 114 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்