முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னியங்குளம் கிராமத்தில் மகள் காணாமல்போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல்போயிருப்பதாக தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.