பேருந்து சில்லில் சிக்கி 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.
அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லீம் வித்தியாலய முதலாம் தர மாணவி, பாடசாலையில் இருந்து பேருந்தில் வீடு திரும்ப பேரூந்தில் இருந்து இறங்கியபோது, பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.