நுவரெலிய, வெலிமடை வீதியில் காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் படுகாயமடைந்ததாக தெரியவருகின்றது.
இதனால் நுவரெலிய, வெலிமடை வீதியில் ஹக்கலை பூந்தோட்டம் அருகில் பொதுமக்கள் வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேக கட்டுப்பாட்டை குறைக்கும் வீதி தடைகளை (பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே குறித்த பகுதியில் விபத்துக்கள் அதிகரிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.