திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் 15 வயது ( மாணவி ) சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தரம் 9இல் கல்விகற்கும் குறித்த மாணவி சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சிறுமி பாடசாலை முடிவடையும்வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும்,
பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதோடு 50 ரூபா பணம் தாயிடம் பெற்றுச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.