நேற்று 2,361 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 223,638 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,329 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 32 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
32,955 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 2,031 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,657 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.