இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157/= ஆகவும்,
ஒக்டேன் 95 பெற்றோல் 184/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் 111/= ஆகவும்,
சுப்பர் டீசல் 144 /= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 77/= ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.