கூக்லே குட்டப்பா என்பது ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவால் எழுதி சபரி – சரவணன் இயக்கிய அறிவியல் புனைகதை நகைச்சுவை நாடகம். ஆர்.கே.செல்லுலாய்டு பேனரின் கீழ் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவுடன் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் படம்தான் கூகுள் குட்டப்பா. கேஎஸ் ரவிக்குமார் மற்றும் விஜயகுமாரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சபரி சரவணன் இயக்கியிருக்கிறார். இப்படம் மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வசூல் சாதனை படைத்தது.
அந்த படத்தை இயக்குனர் தமிழில் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலரை வைத்து இயக்கியிருக்கிறார். பொதுவாகவே சையின்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்றால் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தப் படம் அப்படி எந்த வித பிரம்மாண்டமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் தர்ஷன் இருவரும் அப்பா, மகன் கேரக்டரில் நடித்து இருக்கின்றனர். வெளிநாட்டு வேலைக்காக தந்தையை பிரிந்து செல்லும் தர்ஷன், அவருக்கு துணையாக ஒரு ரோபோவை அனுப்பி வைக்கிறார். ஆரம்பத்தில் அதை பிடிக்காத கேஎஸ் ரவிக்குமார் போகப் போக அதை தன் மகனாகவே பாவித்து வருகிறார்.
சில காலங்களுக்குப் பிறகு அந்த ரோபோவை திரும்ப வாங்க வரும் தர்ஷினிடம் கேஎஸ் ரவிக்குமார் அதை கொடுக்க மறுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த கூகுள் குட்டப்பாவின் கதை. இப்படம் மலையாள திரைப்படம் அளவுக்கு இல்லை என்றாலும் கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு சற்று ஆறுதலாக இருக்கிறது.
மேலும் யோகிபாபுவின் காமெடிகளும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது அதைத்தவிர பாடல் காட்சிகள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. தர்ஷன் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது லாஸ்லியாவுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை. சொல்லப்போனால் அவர் நடிப்பில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வழக்கமான ஹீரோயின்களைப் போல இந்த படத்தில் அவருக்கு பெரிதாக காட்சிகள் எதுவும் சொல்லும்படி அமையவில்லை.
அதனால் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் அறுவையாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாளத் திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவிற்கு செய்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக் ரசிகர்களை கவர தவறிவிட்டது.
மேலும் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட தர்ஷனின் நடிப்பு இந்த படத்தில் பரவாயில்லை ரகம்தான்.
அதிலும் ஹீரோயின் லாஸ்லியா உடனான காதல் காட்சிகள் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அண்ணன், தங்கை போன்று பாசமாக பழகி வந்த இவர்களை ரசிகர்களும் அந்தக் கோணத்தில் தான் பார்த்து வருகின்றனர்.
அதனால்தான் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானதுமே பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர். தற்போது இவர்களின் ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருக்கிறது.
அவர்களின் நெருக்கமான காட்சிகளை பார்க்கும்போது தர்ஷன், லாஸ்லியா இருவருமே மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு தான் நடித்து இருப்பது போல் தெரிகிறது. அந்தக் காட்சிகளில் கெமிஸ்ட்ரி எதுவும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
இதன் பிறகு இவர்கள் இருவரும் அண்ணன், தங்கையாக வேண்டுமானால் நடிக்கலாம். ஆனால் ஜோடியாக நடிப்பது எடுபடாது என்பதுதான் பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னணி ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்குள் வந்து இருக்கும் லாஸ்லியா இதில் இன்னும் நிறைய தூரம் போகவேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் அவர் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் தற்போது இந்த பிக்பாஸ் ஜோடியால்தான் பின்னடைவை சந்தித்து வருவதாக தெரிகிறது.
மொத்தத்தில், நிச்சயதார்த்தத்தின் அடிப்படையில் படம் சிறப்பாக இருந்திருக்கலாம், ஆனால் அது சொல்வது போல் மோசமாக இல்லை. தொழில்நுட்ப ரீதியாக, படம் கண்ணியமானது, ஜிப்ரானின் இசை தனித்து நிற்கிறது. நீங்கள் அசல் மலையாளப் படத்தைப் பார்த்திருந்தால், மனித உருவத்திற்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இடையிலான அழகான தருணங்கள் இதைப் பார்க்கக்கூடிய படமாக்குகின்றன.