கோட்ட ஹோ கம முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக இருக்கிறது.
தடிகளுடனும், பொல்லுகளுடனும் அங்கு அடியாட்கள் சுற்றும் காட்சிகளைக் காணக் கூடியதாக உள்ளது.
காலிமுகத்திடலில் தற்போது அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பலத்த இராணுவப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடுக்க தவறியதாக அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
ஜே.வி.பி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கோட்ட ஹோ கமவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவர், தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தினார்.