திருகோணமலை-கிண்ணியாவில் இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் சிறுமி யொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை-அரை ஏக்கர் பகுதியிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இந்த விபத்தில் 09 வயதுச் சிறுமி பலியாகியுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் இன்று (26)காலை 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பலியானவர் காக்காமுனை அரை ஏக்கர் பகுதியைச் சேர்ந்த குத்புள்ளாஹ் பாத்திமா றிஹா (09வயது) என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
காலையில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் எதிரே வந்த டிப்பர் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டி செல்வதற்கு இடம் கொடுக்கும் போது குறித்த கனரக வாகனம் மோதியதிலேயே சிறுமி பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்துள்ளார்.
சிறுமியின் சடலம் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் டிப்பர் வாகன சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்
விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.