பாணந்துறையில் சொகுசு வாகனத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பின்வத்த என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனமொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வாகனத்தில் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
லான்ட் குருஸர் ரக ஆடம்ப வாகனமொன்றில் பயணம் செய்த நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.