சுகாதார துறை உத்தியோகத்தர்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் சிறப்பு வேலைத்திட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைமுறைப்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குவது 48 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.