Home Local news கொழும்பிற்குள் ரோந்து பணிகளில் இராணுவ கவச வாகனங்கள்: முப்படையினரும் குவிப்பு

கொழும்பிற்குள் ரோந்து பணிகளில் இராணுவ கவச வாகனங்கள்: முப்படையினரும் குவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் இராணுவ கவச வாகனங்களுடன் முப்படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பு மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை தாக்கியிருந்தனர்.

இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வன்முறை சம்பங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது கொழும்பின் பல பகுதிகளில் இவ்வாறு இராணுவ வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது-இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
Next articleவிடாமல் துரத்தும் பீஸ்ட் பட விவகாரம் !! நெல்சன் தலையில் இடியை இறக்கிய ரஜினி !! வெளியான அதிர்ச்சி உண்மை !!