Home வவுனியா செய்திகள் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: வவனியாவில் அதிர்ச்சி சம்பவம்!

காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: வவனியாவில் அதிர்ச்சி சம்பவம்!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த மாணவன் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

தூக்கத்திற்கு சென்ற மகனை இன்று காலை எழுப்புவதற்காக பெற்றோர் சென்ற நிலையில் மகனை காணவில்லை. பின்னர் வீட்டின் வெளிப்பகுதியில் முகப்பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதனை கண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக இன்று (06) காலை வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: வவனியாவில் அதிர்ச்சி சம்பவம்!

குறித்த சம்பவத்தில் தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 14) என்ற விபுலானந்த கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: வவனியாவில் அதிர்ச்சி சம்பவம்! வவுனியா தோணிக்கல் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். குறித்த மாணவன் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரும் மாட்டினார்
Next articleவவுனியாவில் இளம்பெண் மாயம்!