ஒரு காதலனுக்கான மாணவிகள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சிலர் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போது கடும் வாக்குவாதம் செய்துகொண்டே வந்தனர்.
பின்னர் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக தாக்கினார். கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு அடித்துக் கொண்டனர்.
பின்பு இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்து சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு மக்கள் கூட்டம் கூடியது. சிலர் மாணவிகளை தடுக்க முயன்றனர்.
இருப்பினும் மாணவிகள் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள். சிலர் இந்த சண்டையை வேடிக்கை பார்த்ததோடு செல்போனிலும் படம் பிடிக்க தொடங்கினர். மக்கள் கூட்டத்தையோ, தங்களை வீடியோ எடுப்பதையோ மாணவிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
வெகுநேரத்துக்கு பின்னர் பொதுமக்களில் சிலர் அவர்களை விலக்கிவிட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை.
இதில் ஒரு மாணவி தாக்கப்பட்டதில் மூக்கு உடைந்தது. அவரை காதலன் என சொல்லப்படும் மாணவன் பாதுகாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.
இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை என்றாலும் ஒரு காதலனுக்காக 2 மாணவிகள் மோதிக்கொண்டதாக தெரிகிறது.
சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார். இதுதான் இந்த சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக மாணவிகள் 2 பேரும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு மோதியுள்ளனர். பின்னரே நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Y'all need to even if y'all haven't already ??? pic.twitter.com/fBbJv9CXoc
— T.sh (@Taha_shah0) May 17, 2022