ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தற்காலிகமாக பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பை எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.