Home Accident News உத்தரதேவி ரயிலால் இன்று இரு விபத்துக்கள்

உத்தரதேவி ரயிலால் இன்று இரு விபத்துக்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற உத்தரதேவி ரயில் ஓமந்தையில் மாடுகளுடன் மோதியத்தில் 16 எருமை மாடுகள் பலியாகியுள்ளன இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உத்தரதேவி ரயிலால் இன்று இரு விபத்துக்கள்

இதேவேளை இந்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இச்சம்பவம் இன்று காலை 6.50 மணியளவில் வவுனியா திருநாவற்குளத்தில் இடம்பெற்றது.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினை மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது கொழும்பு நோக்கி பயணித்த உத்தரதேவி புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

உத்தரதேவி ரயிலால் இன்று இரு விபத்துக்கள்

குறித்த விபத்தில் 40வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்தவராவார்.

மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுளியாபிட்டி பொலிஸ் பிரிவு நள்ளிரவு முதல் லொக்டவுன்
Next articleவங்கி ஊழியர்கள் உட்பட 17 பேருக்கு கொரோனா