உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இவ்வாறு மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.