முடி உதிர்வு பிரச்சினை இளம் வயதினரை ஆட்டிப்படைத்து வருகின்றது.
30 வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழுக்கை வருவதைக் காணலாம்.
இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக முடி உதிர்தல் மற்றும் நரை முடி பிரச்சனை உள்ளது.
இதற்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வெந்தயத்தினை பயன்படுத்தினால் போதும்.
வெந்தயம் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதத்தை முடிக்கு வழங்குகிறது.
இது வேர்களை மீண்டும் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.
இது உங்கள் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால், நீளமான அடர்த்தியான மென்மையான முடியை நீங்கள் பெறலாம்.
விதைகளை வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும்.
எண்ணெயை உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசவும்.
வெந்தயம் ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கும் முடியைப் பெற உதவும். பொடுகு, முடி உதிர்தல்,வழுக்கை மற்றும் பிற முடி பிரச்சனைகளுக்கு இதன் மூலம் நீங்கள் தீர்வு காணலாம்.
வெந்தயமானது முடி உதிர்தலில் குறிப்பிடத்தக்க குறைப்பை வெளிப்படுத்துகிறது.
வெந்தயத்தை நேரடியாக நீங்கள் தலையிலும் பயன்படுத்தலாம்.
வாய்வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். மக்கள் அதை ஆறு மாதங்களுக்கு 300 mg/day வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.ஒவ்வாமை பிரச்சினை இருந்தால் மருத்துவ ஆலோசனையின் பின்னர் பயன்படுத்துங்கள்.