நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.
எனவே நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைரஸ் பரவல் பாரதூரமான நிலைமையை அடைந்தால் மாற்றுவழியாக முடக்கத்துக்கான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.