Home Tamil News இராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்

இராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச் சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்

ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றி சென்ற வாகனத்தினை ஓமந்தை நகர் பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் வழிமறித்துள்ளனர்.

இராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்

இதன்போது மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றதுடன் கடமையில் இருந்து இராணுவத்தினர் மீதும் மோதியுள்ளனர்.

இராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்

இதனால் நீண்டதூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட இராணுவவீரர் ஒருவர் வீதியில் வீசப்பட்டநிலையில் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றொரு சிப்பாயும் காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

காயமைடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இராணுவத்தினரை மோதிதள்ளி தப்பி சென்ற கடத்தல்காரன்

மரங்களை கடத்திச்சென்ற வாகனம் வீதிக்கரையில் விபத்திற்குள்ளாகி நின்றதுடன், அதன் சாரதி தப்பித்துசென்றுள்ளார்.

அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்ப்பாணத்தில் 10 பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கொரோனா தொற்று
Next articleகுளிக்க சென்று நீரில் மூழ்கிய இரு சிறுவர்கள்! நோன்புடன் உயிரை இழந்த பரிதாபம்!