இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா (1.6 மில்லியன் அமெரிக்க டொலர் ) பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தோனேஷியா தூதுவரால் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதேவேளை மொத்த உதவி 3.1 தொன்கள் ஆகும். இன்று 1,284 கிலோ (1.2 தொன்) வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மே 8 ஆம் திகதி இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் ஊடக கொண்டுவரப்படவுள்ளது.