பொத்துவில் அறுகம்பை மீன்பிடித் துறையிலிருந்து இயந்திரப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
பொத்துவில் களப்புக்கட்டு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான மொகமட் தாஹா என்பவரும், பொத்துவில் பசரிச் சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய மொகமட் ஜௌபர் என்பவரும் இன்று (26) வரை வீடு திரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளனர்.
இதே வேளை காணாமல் போன இருவரையும் இலங்கை கடற்படையினர்கள் சுளியோடிகளின் உதவியுடன் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளதாக ரியல் அட்மிரல் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.