தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் எந்த அளவிற்கு கஷ்டங்களை தாண்டி தற்பொழுது உயரத்தில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மன்றமே இல்லாமல் இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகரும் இவர்தான். இவரது திரைப்படங்கள் இப்பொது தொடர்ந்து வெற்றிபெற்று வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்தது.
குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார், கிரீடம் ஆகிய படங்கள் வெளியாகி தோல்விகளை சந்தித்தது. அதன் பில்லா படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அஜித் அசல் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, நடிகர் ரஜினி அஜித்திற்கு அட்வைஸ் செய்துள்ளாராம்.
ஆம், அஜித்திடம்” நீங்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிங்கள். அது உங்களுக்கு சூப்பராக இருக்கிறது. நீங்க நெகட்டிவாக நடித்த வாலி, வரலாறு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால், நீங்கள் நெகட்டிவ் ஷெட் கொண்ட கதாபாத்திரங்களில் நடிங்கள்” என்று ரஜினிஅட்வைஸ் செய்தாராம்.
அந்த சமயம் தான் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் கதையை அஜித்திடம் சொன்னாராம். கதை நன்றாக இருந்ததாலும், ரஜினி கூறிய அட்வைஸ் வைத்து உடனடியாக அஜித் ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பிறக படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் குவித்தது.